நீங்கள் ஒரு சாலையோர தள்ளுவண்டிக் கடையில் 20 ரூபாய்க்கு ஏதேனும் பொருள் வாங்குகிறீர்கள். அந்த வியாபாரி சில்லறை இல்லை , கூகிள் பேயில் (GPay) பணம் போட்டுவிடுங்கள் என்று சாதாராணமாக கேட்பார்.
ஆம் இன்று இந்தியாவின் அனைத்து சாலையோரத் தள்ளுவண்டிக் கடைகளிலிருந்து சூப்பர் மார்க்கெட், ஆன்லைன் வர்த்தகம், செல்ஃபோன் ரிஜார்ஜ், மின் கட்டணம் என அனைத்துவகை வணிகங்களும்
யூபிஐ (UPI) எனப்படும் ஒருங்கிணைந்த டிஜிட்டல் முறைக்கு மாறியுள்ளன.
நாம் அனைவரும் பணம் செலுத்தும் செயலிகளான Phonepe, Google Pay, Paytm போன்ற செயலிகளை பயன்படுத்தப் பழகிவிட்டோம்.
இந்தப் செயலிகள் நம் வாழ்வின் ஒர் முக்கிய அங்கமாக மாறியுள்ளன.
இந்தப் பயன்பாடுகளின் பரிவர்த்தனை UPI (Unified Payment Interface) என்கின்ற ஒர் ஒற்றை இடைமுகத்தின் மூலம் நடைபெறுகிறது. இந்த
ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் UPI என்பது இந்திய தேசியக் கட்டணக் கழகத்தால் (NPCI) உருவாக்கப்பட்ட ஒற்றை இடைமுகக் கட்டண அமைப்பாகும்.
யுபிஐ என்பது ஓர் ஸ்மார்ட்போன் பயன்பாடாகும்.
இது பயனர்களின் வங்கிக் கணக்குகளிக்கிடையே பணத்தை பரிமாற்றத்தை அனுமதிக்கிறது.
வாடிக்கையாளர்கள் வெவ்வேறு வங்கிகளில் வைத்திருக்கும் வங்கிக் கணக்குகளை ஒரே UPI பயன்பாட்டில் இணைத்து,
தங்களுடைய பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணைப் பயன்படுத்தி,
தங்களுக்கிடையே 24 மணிநேரமும் எளிதாக வர்த்தகம் செய்யக்கூடிய தளமாக UPI செயல்படுகிறது.
இது நம்மிடம் உள்ள பல வங்கிகளின் ஒரே மொபைல் பயன்பாட்டில் பல வங்கிக் கணக்குகளிலிருந்து பராமரிக்கும் அமைப்பாகும்.
தடையற்ற நிதி ரூட்டிங், வணிகர்களுக்கு ஒரே கூரையின் கீழ் பணம் செலுத்துதல் போன்ற பல வங்கி அம்சங்களை UPI ஒருங்கிணைக்கிறது.
நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (என்பிசிஐ) ஒற்றைச் சாளர மொபைல் கட்டண முறையை (மொபைல் பேமெண்ட்ஸ்) உருவாக்கியlg.
ஒவ்வொரு முறையும் ஒரு வாடிக்கையாளர் பரிவர்த்தனையைத் தொடங்கும்போது வங்கி விவரங்களையும் பிற முக்கியத் தகவல்களையும் உள்ளிட வேண்டிய அவசியமில்லை என்பதால் நேத விரயம் தவிர்க்கப்படுகிறது.
In-App கட்டணங்கள், குறுக்கு-திரை QR குறியீடுகள், இணைய அடிப்படையிலான கட்டணங்களைச் செலுத்துதல் மற்றும் மின்-வாலட்களைப் பயன்படுத்தி ஆன்லைன் கட்டணங்களுக்கான சேவைகளின் வரம்பை நீட்டித்தல் போன்ற பல புதிய அம்சங்களை UPI அறிமுகப்படுத்தியுள்ளது.
கேள்விக்குறியாகும் பாதுகாப்பு
நூற்றுக்கணக்கான துறைகளில் உள்ள ஆயிரக்கணக்கான நிறுவனங்கள்,
UPI ஆட்டோ பே வசதியை அங்கீகரித்து, கடந்த ஒன்றரை ஆண்டுகளில் அதைச் செயல்படுத்தியுள்ளன.
டிஜிட்டல் பொருளாதாரத்தில் இது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், UPI பேமெண்ட் என்பது ஆபத்து வாய்ந்ததாகவும் இருந்துவருகிறது.
தற்போது இந்த அபாயங்களை நீக்கும் வண்ணம் யூபிஐ தனது பலகட்ட ஆய்வுகளை மேற்கொண்டுவருகிறது.
இதனால் வங்கிப் பயனர்களின் பாதுகாப்பு ஒரு பெரிய பிரச்சினையாக மாற வாய்ப்பில்லை.
யுபிஐயின் எதிர்காலம்
இந்தியாவில் இந்த அற்புதமான UPI கட்டண முறையின் வளர்ச்சி, அது எவ்வாறு? எங்கு? எப்படி செல்கிறது? என்பதையெல்லாம் புரிந்துகொள்ளச் UPI-ன் வரலாற்றை சிறிது பின்னோக்கித் திரும்பிப் பார்க்க வேண்டும்.
UPI பயன்பாடு முதன்முதலில் 2016இல் தொடங்கப்பட்டது.
இது நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவால் (NPCI) சோதனை செய்யப்பட்டு, 21 வங்கிகளின் உறுப்பினர்களாக கொண்டு அப்போதைய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்த ரகுராம் ஜி. ராஜன் மூலம் தொடங்கப்பட்டது.
UPIஇன் இலக்கு பயனாளர்கள் பணத்தை மாற்றுவதற்கான டிஜிட்டல் முறைகளை எளிமாப்படுத்துகிறது.
இந்தியாவில் UPI பரிவர்த்தனைகளின் வளர்ச்சியையும், நாட்டின் வளர்ச்சியடைந்து வரும் பணமில்லாப் பரிவர்த்தனை அமைப்பில் அவை எவ்வாறு முக்கியக் காரணியாக மாறியுள்ளன என்பதையும் அனைவரும் அறிந்ததே. UPI-ன் அதிகபட்ச கட்டண வரம்பு ரூ. 1 லட்சம்.
ஆய்வு அறிக்கைகளின்படி, UPI இயங்குதளங்களில் 2018இல் 3 பில்லியனுக்கும் அதிகமான பரிவர்த்தனைகள் நடந்துள்ளன, 620 மில்லியன் பரிவர்த்தனைகள் டிசம்பர் 2018இல் மட்டும் ரூ. 1 லட்சம் கோடியைத் தொட்டன.
இந்த ஆண்டு ஜனவரியில் மற்றொரு அறிக்கையின்படி, UPI பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை மற்ற டிஜிட்டல் கட்டண முறைகளுக்கு முன்னோடியாகக் விளங்குகிறது.
பணமில்லாப் பொருளாதாரத்தில் ஒரு முக்கியக் காரணியாக சுமார் 1.09 டிரில்லியன் ரூபாய் அளவுக்குப் பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளது.
UPI எதிர்காலத்தில் சிறந்த வளர்ச்சிக்கான பரந்த வாய்ப்பினை கொண்டுள்ளது,
இது நம் வாழ்க்கையை எளிதாக்கியுள்ளது. பாதுகாப்பான, வேகமான பணம் செலுத்தும் முறைகளில் முதன்மையானதாக UPI உள்ளது.
மோசடிகள் நடந்தால், சக்திவாய்ந்த இடர் மேலாண்மை அமைப்பாக,
நாடு முழுவதும் எளிதான பரிவர்த்தனைகளுக்கு UPIஐப் பயன்படுத்துவதற்கான திட்டங்களை அரசாங்கம் கொண்டுள்ளது.
டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கி முன்னேறும் ஒரு நாட்டின் முற்போக்கான பார்வையை UPI குறிக்கிறது.
இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரத்தை உயர்த்துவதில் தற்போதைய தொற்றுநோய் முக்கியப் பங்காற்றியுள்ளது.
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியிலும் டிகிட்டல் பொருளாதாரம் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளது.
இன்று உலகமே இந்தாயாவின் யுபிஐயின் வெற்றி குறித்து ஆய்வு செய்துவருகிறது.
உலகில் வேறு எந்த நாட்டிலும் இத்தகைய எளிய பாதுகாப்பான டிஜிட்டல் பணம் செலுத்தும் முறை பயன்பாட்டில் இல்லை.
அமெரிக்கா, சீனா போன்ற தொழில்நுட்ப ஜாம்பவான்களிடம்கூட இத்தகைய பணம் செலுத்தும் அமைப்பு இல்லை. இதில் இந்தியாதான் முன்னோடி!